இலங்கையின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனமான (CA Sri Lanka) ஏற்பாடு செய்திருந்த, சமீபத்தில் இடம்பெற்ற 2022 TAGS விருதுகளில் இரண்டு தங்க விருதுகள் மற்றும் ஒரு வெண்கல விருதை வெற்றி பெற்றதன் மூலம் DIMO அதன் 2021/22 ஆண்டு அறிக்கைக்கு மற்றுமொரு கௌரவத்தை பெற்றுள்ளது. ஒருங்கிணைந்த அறிக்கையிடலில் தங்க விருதை DIMO வென்றுள்ளதன் மூலம் இத்துறையில் முன்னோடி எனும் அதன் நிலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. நிலைபேறானதன்மை அறிக்கையிடல் (Sustainability Reporting) பிரிவில் வெண்கல விருதையும், பல்வகைப்பட்ட துறைகள் பிரிவில் (Diversified Holdings) தங்க விருதையும் அது வென்றுள்ளது (குழுமத்தின் மொத்த புரள்வு ரூ. 50 பில்லியன் வரையானது).

DIMO குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கஹநாத் பண்டிதகே, DIMO நிறுவனத்தின் நிதிப் பொது முகாமையாளர் சுதத் மஹகெதர மற்றும் DIMO நிறுவனத்தின் வர்த்தக ஆதரவு பொது முகாமையாளர் திருமதி மதுரிகா சமரசேகர ஆகியோர், ஒருங்கிணைந்த அறிக்கையிடலுக்கான தங்க விருதை பெற்றுக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *