மூலிகைகள் கொண்ட தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களின் உற்பத்தியில் முன்னணியில் உள்ள சுதேசி இன்டஸ்ட்ரியல் வேர்க்ஸ் பி.எல்.சி. ஆனது, அதன் சமூக ஆதரவு முயற்சிகளில் ஒன்றாக, வரலாற்றுச் சிறப்புமிக்க வாரியபொல, கொலம்பகம மியுகுணராம ரஜமஹா விகாரையின் ஒளியூட்டும் “ஆலோக பூஜை” நிகழ்விற்கு பொசன் பௌர்ணமி தினத்தன்று அனுசரணை வழங்கியிருந்தது. ‘சுதேசி கொஹொம்ப ஆலோக பூஜா சத்காராய’ நிகழ்வு ஆனது, சுதேசி நிறுவனத்தின் தலைவி திருமதி அமரி விஜேவர்தனவின் எண்ணக்கருவிற்கு அமைவானதாகும்.

குருணாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள வாரியபொல, கொலம்பகம மியுகுணராம ரஜமஹா விகாரை, தேவநம்பியதிஸ்ஸ மன்னனால் (கிமு 250-210) கட்டப்பட்ட ஆரம்பகால விகாரைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சுமார் 4 மைல்களுக்கு ஒரு விகாரை என மன்னன் நிர்மாணித்ததாக தெரிவிக்கப்படும் விகாரைகளில் இதுவும் முதல் முதலில் கட்டப்பட்ட விகாரைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ‘தம்பிட்ட விஹாரய’ வடிவத்தில் கட்டப்பட்ட ‘ஸ்ரீ விஷ்ணு தேவாலயம்’ தற்போது மிகவும் பிரபலமானதாக விளங்குகின்றது. இலங்கையில் அரிதாக காணப்படும் ‘வரத முத்திரை’ உடன் கூடிய பழமையான புத்தர் சிலையும் இவ்விகாரையிலேயே காணப்படுகின்றது.

சுதேசி நிறுவனத்தின் தலைவி அமரி விஜேவர்தன, ஆலோக பூஜா திட்டம் குறித்து தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டபோது, ​“சுதேசி நிறுவனம், பாரம்பரிய விழுமியங்கள் மற்றும் பழக்கவழக்கங்களை பேணும் ஒரு இலங்கை நிறுவனம் எனும் வகையில், வருடாந்த ஆலோக பூஜை போன்ற விடயங்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் இலங்கையின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதை கடமையாக கருதுகிறது. ஒரு சமூகப் பொறுப்புள்ள நிறுவனமாக, இந்த முயற்சிகளுக்கு எமது முழு ஆதரவையும் வழங்க நாம் உறுதிபூண்டுள்ளோம். இதன்மூலம் எதிர்கால தலைமுறைகள் பின்பற்றுவதற்கு சரியான முன்மாதிரியொன்றை நாம் உருவாக்குகிறோம்.” என்றார்

அவர் மேலும் தெரிவிக்கையில், “சுதேசியினால் நாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் ஒளியூட்டப்பட்டு வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகின்றமையானது, அனைத்து வழிபாட்டாளர்களின் நலனுக்காக மாத்திரமன்றி நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வூட்டுவதனையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.” என்றார்.

சுதேசி தலைவி திருமதி அமரி விஜேவர்தன நாடு முழுவதிலும் உள்ள மத ஸ்தலங்களுக்கும் தொடர்ந்தும் ஆதரவளித்து வருகிறார். 2013 ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க தம்பதெனிய ரஜமஹா விகாரையின் ‘ஸ்ரீ தலதா மாளிகை’ மற்றும் பழங்கால சுவரோவியங்கள், திருமதி அமரி விஜேவர்தனவினால் புனரமைக்கப்பட்டன. 1927 இல் களனி ரஜ மகா விகாரையின் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்த ஹெலனா விஜேவர்தன லமாதெனியின் கொள்ளுப் பேத்தியே திருமதி அமரி விஜேவர்தன  ஆவார்.

கதிர்காம கிரி வெஹெர, ருஹுணு கதிர்காம மஹா தேவாலயம், சபரகமுவ மஹா சமன் தேவாலயம், தெவுந்தர ஸ்ரீ விஷ்ணு மஹா தேவாலயம், அலுத்நுவர ஸ்ரீ தெடிமுண்ட மகா தேவாலயம், கண்டி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவாலயம், ரிதிகம ரிதி விகாரை, லங்காதிலக ரஜ மஹா விகாரை, அம்மதுவ குடா கதரகம தேவலாயம், தெரணியகல சமன் தேவாலயம், தம்பதெனிய ரஜ மகா விகாரை, கேரகல ரஜ மகா விகாரை ஆகியவற்றின் வருடாந்த ஆலோக பூஜைகளுக்கும், சுதேசி கொஹொம்ப நிறுவனம் பங்களிப்புச் செய்து வருகின்றது.

100% உள்ளூர் நிறுவனமான சுதேசி, இலங்கையிலுள்ள சமூகங்களுக்கான தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் சமூக பொறுப்புணர்வு திட்டங்களைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது. சுதேசி கொஹொம்ப ஆனது, இயற்கை அன்னையை பராமரித்தல், கலாசார விழுமியங்களை மேம்படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்தி, நிலைபேறான திட்டங்களை நிறைவேற்றுதற்காக தன்னை அர்ப்பணித்துள்ளது. ‘சுதேசி கொஹொம்ப ஆலோகா பூஜா’, ‘சுதேசி கொஹொம்ப மிஹிந்தலை சத்காரய’ வேப்பிலை மர நடுகை பிரசாரங்கள், இலங்கையில் வரட்சியான பிரதேச சமூகங்கள், பாடசாலைகள், விகாரைகளுக்கு நீர்த் தொட்டிகளை வழங்குதல், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொஹொம்ப பேபி பராமரிப்பு பொருட்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சமூக பொறுப்பு வாய்ந்த நடவடிக்கைகளை சுதேசி நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது.

இலங்கையிலுள்ள மூலிகையுடனான தனிநபர் பராமரிப்பு பிரிவில் முன்னோடியும் சந்தையின் முன்னணி நிறுவனமுமான Swadeshi Industrial Works PLC நிறுவனம் 1941 இல் கூட்டிணைக்கப்பட்டது. சுதேசியின் முன்னணி வர்த்தகநாமங்களில் சுதேசி கொஹொம்ப, ராணி சந்தனம், சுதேசி கொஹொம்ப பேபி, பெர்ல்வைட், லக் பார், சேஃப்ப்ளஸ், பிளக் ஈகிள் பேர்ஃப்யூம், கொஹொம்ப ஹேண்ட் வொஷ், கொஹொம்ப பொடி வொஷ், ராணி ஷவர் கிறீம் ஆகியவை உள்ளடங்குகின்றன. சுதேசி நிறுவனம், முன்னணி மூலிகை வர்த்தகநாமமான கொஹொம்ப ஹேர்பல் மற்றும் பாரம்பரிய அழகு வர்த்தகநாமமான ராணி சந்தனம் ஆகியவற்றை தயாரித்து சந்தைப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

“இலங்கையின் முன்னணி மூலிகை தனிநபர் பராமரிப்பு தயாரிப்புகளின் உற்பத்தி நிறுவனம் எனும் வகையில், சுதேசி அதன் அனைத்து தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்படும் மூலிகைப் பொருட்களின் செயற்பாட்டு நன்மைகள் தொடர்பில் நுகர்வோர் மேலும் அறிந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறது. நாங்கள் இலங்கையின் சிறந்த மூலிகைகளை மட்டுமே பயன்படுத்துகிறோம் என்பதுடன், பயன்படுத்தப்படும் அனைத்து மூலப்பொருட்களும் விரிவாக ஆய்வுக்குள்ளாக்கப்படுகின்றன. தயாரிப்புகளின் தரத்தை உறுதி செய்வதற்காக முழுமையாக சோதனைக்கு உள்ளாக்கப்படுவதுடன், எமது தயாரிப்புகள் யாவும் 100% சைவத்தை அடிப்படையானது. அவை விலங்குகள் மீது சோதிக்கப்படவில்லை என்பதுடன் விலங்குகளின் கொடுமைகளிலிருந்து விலக்கற்றவை. ராணி சந்தனம் உள்ளிட்ட சுதேசி தயாரிப்புகள் யாவும் இங்கிலாந்தின் Vegetarian Society, UK யின் அங்கீகாரம் பெற்றவை.” இந்த உறுதிமொழியானது, நிறுவனத்தின் முன்னோக்கு-சிந்தனை நடைமுறைகளுக்கும், நுகர்வோருக்கு நெறிமுறை ரீதியானதும் சூழல் நட்புரீதியானதுமான தெரிவுகளை மேற்கொள்ள உதவும் என நாம் எதிர்பார்க்கிறோம். நிறுவனம் எப்போதும் தனது தயாரிப்புகளின் ஆரோக்கியம் மற்றும் சூழல் தாக்கத்தை கருத்தில் கொண்டு, தொடர்ந்தும் அவற்றிற்கு முன்னுரிமையளிக்கின்றது. உண்மையான இலங்கை நிறுவனமான சுதேஷி, கடந்த 80 வருடங்களில் தொழில்துறையில் முந்திக் கொண்டு தனது பெயரில் பல்வேறு முதல் சாதனை உரிமை கோரல்களுக்கு உரித்துடையதாக திகழ்கின்றது.

கிருமிகளுக்கு எதிராக இயற்கையான பாதுகாப்பை வழங்கும் வேம்பின் நன்மையால் செறிவூட்டப்பட்ட ‘சுதேஷி கொஹொம்ப ஹேர்பல் ஹேண்ட் வொஷ்’ ஆனது, சுதேசி கொஹொம்ப உற்பத்திகளில் ஒரு புதிய உற்பத்தியாக அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. சுதேசி கொஹொம்ப ஹேர்பல் ஹேண்ட் வொஷ் இரண்டு வகைகளில் கிடைக்கிறது. Swadeshi Khomba Herbal Hand wash – வேம்பு உடன் எலுமிச்சை புல், கற்றாளை கொண்டது மற்றும் Swadeshi Khomba Herbal Hand wash – வேம்பு, மஞ்சள், கற்றாளை கொண்டது.

Photo Caption –

திருமதி அமரி விஜேவர்தன – சுதேசி நிறுவனத்தின் தலைவி, வாரியபொல, கொலம்பகம மியுகுணராம ரஜமஹா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய கல்லேஹெபிட்டியே பேமரத்தன தேரர் மற்றும் சுதேசி நிறுவன அதிகாரிகள் இணைந்து வரலாற்றுச் சிறப்புமிக்க வாரியபொல, கொலம்பகம மியுகுணாராம ரஜமஹா விகாரையை ஒளியூட்டிய வேளையில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *